கன்னியாகுமரி மாவட்டத்தில், மாமியாருக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணதாஸ் (36) என்பவருக்கு பெண் ஒருவர் தனது மகளை திருமணம் செய்துகொடுத்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான கிருஷ்ணதாஸ், ஒருநாள் மாமியார் வீட்டிற்குச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், மனமுடைந்த அப்பெண், தனது மகள் மற்றும் மகளின் ஆண் நண்பருடன் சேர்ந்து கிருஷ்ணதாஸை கொலை செய்துள்ளார்.