மயிலாடுதுறை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு DSP சுந்தரேசன், வீட்டில் இருந்து பணிக்கு நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இது குறித்து பேசிய அவர், தன்னுடைய வாகனம் பறிக்கப்படவில்லை என எஸ்.பி கூறுவது பொய். அமைச்சர் மெய்யாநாதன் பாதுகாப்புக்கு வாகனம் வேண்டும் என வாங்கி சென்றனர். ஆனால், அதற்கு பதிலாக அளித்த வாகனம் சரியான நிலையில் இல்லை. என் உயிர் முக்கியம் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.