தமிழ்நாட்டில் உள்ள அனைத்து, அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நகராட்சி நிர்வாகத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர்
விஜய் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து அம்மா உணவகங்களுக்கும் தேவையான உட்கட்டமைப்புகளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி: குமுதம்