மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் அது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடருமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போது இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும், அதன் பின்னரே அடுத்தகட்ட
முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.