கரும்பு கொள்முதல்.. இடைத்தரகர்களுக்கு அரசு எச்சரிக்கை!

57பார்த்தது
கரும்பு கொள்முதல்.. இடைத்தரகர்களுக்கு அரசு எச்சரிக்கை!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி மூலமாகவோ அல்லது மாவட்ட வாரியாக இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தாங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், "இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி