கரூர் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, ‘தவெக தலைவர் விஜய், 7 மணிநேரம் தாமதமாக வந்ததால் காலையில் இருந்து கூடியிருந்த தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். நீர்சத்து குறைபாடு காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக போலீஸ் வரவழைக்கப்பட்டனர்’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.