மினி டைடல் பார்க் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

நாகை, கரூர், புதுக்கோட்டையில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவித்துள்ளது. நாகையில் ரூ.42 கோடியில் 58,660 சதுர அடி, கரூரில் ரூ.37 கோடியில் 64,000 சதுர அடி, புதுக்கோட்டையில் ரூ.37 கோடியில் 60,386 சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்களை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை 4 மாதங்களுக்குள் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
