டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறக்காமல் முதல்வர்
விஜய் திரும்பியது அங்குள்ள தமிழ் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சென்ற அவர், நேரடியாகத் தமிழ்நாடு இல்லம் சென்றதோடு, மாலையில்
பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டும் சந்தித்துப் பேசினார்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்திக்காமல், செய்தியாளர்களிடமும் பேசாமல் மறுநாளே சென்னை திரும்பினார்.