திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் பங்குனி பிரமோற்சவ விழாவையொட்டி நடந்த திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேரில் அமர்ந்திருந்த அரவிந்தன் என்பவர் சிறு காயங்களுடன் தப்பினார். நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.