
அறிமுகமில்லாத நபர்களிடம் பண பரிமாற்றம் செய்ய வேண்டாம்: RBI எச்சரிக்கை
அறிமுகமில்லாத நபர்கள் அல்லது நிறுவனங்களின் பணத்தை, பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் பெறவோ அல்லது அனுப்பவோ கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்காக உங்களது வங்கிக் கணக்குகளை மோசடி கும்பல் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் இதில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விதியை மீறினால் வங்கிக் கணக்கு முடக்கம், போலீஸ் கைது மற்றும் சிறை தண்டனை போன்ற நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் RBI எச்சரித்துள்ளது.































