ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (36) வீட்டில் 110 கிராம் தங்க நகைகள் திருடு போனது. இது குறித்து ஊத்துமலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சக்திவேலின் வெல்டிங் பட்டறைக்கு எதிரே கடை வைத்திருக்கும் தினேஷ் (27) மற்றும் அவரது தம்பி சக்திவேல் (27), கடங்கநேரி மணிகண்டன் (27), அருணாசலப்பேரி ராஜ்குமார் (34) ஆகியோர் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டு, சனிக்கிழமை ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.