தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டாஸ்மாக் கடையில் முதல்வர் படத்தை ஒட்டியதாக, 10 பாஜகவினர் மீது ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆலங்குளம் - புதுப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில் 10 பாஜகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்டினர். இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் முருகன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.