தென்காசி மாவட்டத்தில் தென்காசியில் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று (ஜனவரி 10) காலை முதல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிலையில் ஆழ்வார்குறிச்சி வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்கடேச பெருமாள் அனந்த சயன கோலத்தில் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.