தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், சங்கரன்கோவில் அருகே நடந்த கார்-ஆட்டோ விபத்தில் காயமடைந்தவர்களை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணிக்க மருத்துவரிடம் அறிவுறுத்தினார். உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் நாகராஜன் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.