தென்காசி: ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊர்திகள்; தொடங்கி வைத்த ஆட்சியர்

77பார்த்தது
தென்காசி: ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊர்திகள்; தொடங்கி வைத்த ஆட்சியர்
ஒருங்கிணைந்த சேவை மையங்களுக்கு நேரடியாக வர முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணித்து அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக்கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகளை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படும். தென்காசி மாவட்டத்தில் இந்த ஊர்திகளை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி