தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தெற்கு அழகு நாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் (18) என்பவர் நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற நிலையில், இன்று மாலை கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற குருவிகுளம் போலீசார், மனோஜின் உடலை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.