சென்னையைச் சேர்ந்த வளர்மதி (23) தனது குடும்பத்துடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருத்தங்கல் சென்றபோது, தனது 17½ பவுன் நகைகள் அடங்கிய பெட்டியை ரயிலில் தவறவிட்டார். உடனடியாக ரயில்வே போலீசில் புகார் அளித்ததை அடுத்து, தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் வந்தபோது போலீசார் பெட்டியை சோதனை செய்து, சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை மீட்டனர். வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பெட்டியை ஒப்படைத்த ரயில்வே போலீசாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.