தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த 415 மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோா் பெற்றுக்கொண்டார். உதவித் தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.