தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அருகே இன்று காலையில் நடைபயிற்சி செய்த ஓய்வுபெற்ற ஊழியர் ராமநாதன், சாலையில் கிடந்த தங்க மோதிரத்தைக் கண்டெடுத்து தென்காசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அந்த மோதிரம் உரியவரான திருமலைக்குமாரிடம் வழங்கப்பட்டது. ராமநாதனின் நேர்மையைப் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.