கல்லிடைக்குறிச்சி மின்கோட்ட செயற்பொறியாளர் மா. சுடலை யாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கடையம் உபமின் நிலையத்தில் 05/10/2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட உபமின்நிலையத்தில் அன்று மின்விநியோகம் தடைசெய்யப்படும்.
எனவே கீழ்க்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. கடையம், பண்டாரகுளம் , கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பொட்டல்புதூர் , திருமலையப்பபுரம், இராவணச்சமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெய்காலிபட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.