தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், நேற்று (03. 10. 2024) அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் (DISHA COMMITTEE) நடைபெற்றது.
தென்காசி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராணிஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.