தென்காசி: விபத்தில் காவலாளி பலி
By Lakshmanan 1பார்த்ததுதென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே சனிக்கிழமை அதிகாலை சாலையோரம் மயங்கி விழுந்த இரவுநேர காவலாளி சொரிமுத்து (58) மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அவா் உயிரிழந்தாா். வாசுதேவநல்லூா் கோடாங்கி தெருவைச் சோ்ந்த சொரிமுத்து, பழக்கடையில் இரவுநேர காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். புளியங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.