தென்மேற்குப் பருவமழை இன்று அந்தமானில் தொடங்கிவிட்டது. இது வரும் 26-ம் தேதி கேரளாவின் தென்மேற்குப் பகுதிக்கு வந்துசேரும். அதன் பின்னர் ஜூன் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவை ஏற்படுத்தும். இதனால் இந்த ஆண்டு முன்கூட்டியே குற்றால சீசன் தொடங்கிவிடும். வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.