தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், கேரளா நோக்கிச் சென்ற கனரக வாகனம் மோதி திருமலைகுமார் (56) உயிரிழந்தார். தொடர்ந்து நடைபெறும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கண்டித்தும், கனரக வாகன இயக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் புளியறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.