கடையநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கல்லாற்றில் கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து மிக அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை குறைந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை முதல் கல்லாற்றில் நீர்வரத்து சீரானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.