திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்

51பார்த்தது
திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா. பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயில் சித்திரை மாத பௌா்ணமி விழா மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மே 10 முதல் மே 13 வரை பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் முக்கிய நகரங்களிலிருந்து 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இதன்படி, திருவண்ணாமலைக்கு கும்பகோணத்திலிருந்து 145 பேருந்துகள், திருச்சி, துறையூா், பெரம்பலூரிலிருந்து 190, அரியலூா் ஜெயங்கொண்டத்திலிருந்து 58, மயிலாடுதுறையிலிருந்து 65, நாகப்பட்டினத்திலிருந்து 50, காரைக்குடியிலிருந்து 48, புதுக்கோட்டையிலிருந்து 51 என மொத்தம் 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இணையதளம் மூலமும், கைப்பேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.