திருவலஞ்சுழியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
திருவலஞ்சுழியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டின் 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி 4000 கோடியை தமிழ்நாட்டிற்கு தராமல் ஏழை எளியவர் வயிற்றில் அடிக்கும் பா.ஜ.க அரசை கண்டித்து குடந்தை மேற்கு ஒன்றியம் திருவலஞ்சுழி ஊராட்சியில் ஒன்றிய கழக செயலாளர் S.K. முத்துசெல்வம் தலைமையில் 900-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் குடந்தை மேற்கு ஒன்றியம் அவைத் தலைவர் U.S.R. லோகநாதன், பொருளாளர் C. இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி T.N. கரிகாலன், R. அன்பழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குருசாமி, திவ்யா, காமராஜ், குடந்தை மாநகரக் கழக அவைத் தலைவர் எஸ். வாசுதேவன், கும்பகோணம் மாநகரக் கழக பொருளாளர் எஸ். ரவிச்சந்திரன், கும்பகோணம் மாநகர் 1வது பகுதி கழக செயலாளர் இரா செல்வராஜ், மண்டல குழு தலைவர் கே.என்.எஸ். ஆசைதம்பி, தாய்மொழி பேரூர் கழக செயலாளர் SMS. பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி துரை. குணாளன், குணசேகர், M. நெடுஞ்செழியன், S. சங்கர், சுப்பிரமணியன், இக்பால், P. கேசவன், DGS. கோபால், GKN. கார்த்திகேயன், செந்தில் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், BLA 2 மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.