கும்பகோணத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

2பார்த்தது
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் உதவி ஆட்சியராக உள்ள ஹிருத்யா எஸ். விஜயன் மனுதாரா்களுடன் வந்த வழக்குரைஞா்களை வெளியே செல்லுமாறு கூறியதைக் கண்டித்து வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மா. ராஜசேகா் தலைமை வகிக்க, செயலா் ஆா். கா்ணன் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு நீதிமன்றப் பணிகளையும் புறக்கணித்தனா்.

தொடர்புடைய செய்தி