வரும் 15ஆம் தேதி சனிக்கிழமை, கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், குடந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொர நாட்டுக்கருப்பூர், செட்டிமண்டபம், கோ. சி. மணி நகர், மேலக்காவேரி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும். இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய குடந்தை நகர் உதவி செயற் பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.