தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு அருகே சீதாம்பாள்புரத்தில் உள்ள ஸ்ரீசக்தி விநாயகர் கோயிலில் நேற்று நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சண்முகசுந்தரம் (48) என்பவரை வாட்டாத்திகோட்டை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையைச் சேர்ந்த இவர், உண்டியலில் இருந்த சுமார் ரூ.1500 ரொக்கம் மற்றும் சில்லறை காசுகளைத் திருடியதாகக் கூறப்படுகிறது. போலீசார் அவரை கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனர்.