தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (50) என்பவர், நிவேதா (21) என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, கரம்பக்குடி வட்டத்தைச் சேர்ந்த மீனாட்சி சந்திரசேகரன் (20) ஓட்டி வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் ரவிச்சந்திரன் மற்றும் நிவேதா பலத்த காயமடைந்தனர். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் உயிரிழந்தார். நிவேதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.