ஒரத்தநாடு அருகே வாலிபரிடம் ரூ. 15 லட்சம் வழிப்பறி

601பார்த்தது
ஒரத்தநாடு அருகே வாலிபரிடம் ரூ. 15 லட்சம் வழிப்பறி
சிவகங்கை மாவட்டம், இளங்குடி புதூரைச் சேர்ந்த அப்துல்ரகுமான் (49) என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து தனியார் பேருந்தில் புறப்பட்டு, சனிக்கிழமை காலை 7 மணி அளவில் ஒரத்தநாடு வந்து இறங்கி, திருவோணம் பிரிவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு, அவரிடமிருந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி