மலேசியா கல்விச்சுற்றுலா சென்று திரும்பிய மாணவருக்கு பாராட்டு

295பார்த்தது
தஞ்சை மாவட்டம், பொன்னவராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் சிவப்பிரியன், மாநில அளவில் ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்தார். இதன் மூலம், தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 42 அரசுப் பள்ளி மாணவர்களுடன் 5 நாட்கள் மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய அவருக்கு பள்ளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கிய மன்றப் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறார்.