தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரியில், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மற்றும் UGC நிர்ணயித்த ரூ.57,800 ஊதியம் வழங்கக் கோரி பேராசிரியர்கள் வகுப்பறை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் இவர்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்து, இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.