தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சோழகனார்வயல் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி புகுந்த வெறிநாய் ஒன்று 5 பொதுமக்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளைக் கடித்தது. கால்நடைத் துறையினர் உடனடியாக 25 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். இன்று பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் நாய்களுக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி முகாம் நடத்திய கால்நடைத் துறையினரை கிராம மக்கள் 'ஹீரோக்கள்' எனப் பாராட்டுகின்றனர்.