பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஞானகுமார் (40), கரிக்காடு பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராசு அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.