பாலுக்கு கூடுதல் விலை: ஆட்சியர் முக்கிய தகவல்

271பார்த்தது
பாலுக்கு கூடுதல் விலை: ஆட்சியர் முக்கிய தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வழங்கும் பால் லிட்டர் ஒன்றுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.3 ஊக்கத்தொகையுடன், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் கூடுதலாக ரூ.1 கொள்முதல் விலையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால், பிப்ரவரி 2026 முதல் ஏப்ரல் 2026 வரை சங்கங்களுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும். இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.