பட்டுக்கோட்டை அருகே வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 65 வயது சக்திவேல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை திருச்சிற்றம்பலம் கடைவீதியில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். திருச்சிற்றம்பலம் போலீசார் அவரது உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.