பேராவூரணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற
திமுக வேட்பாளர் என். அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். கே. ஆர். புரம் பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த சிறுவனிடம், 'விஜய்யைப் பிடிக்குமா,
தளபதி ஸ்டாலினைப் பிடிக்குமா?' என்று அவர் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், '
தளபதி ஸ்டாலினைத்தான் ரொம்பப் பிடிக்கும்' என பதிலளித்தது அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.