தஞ்சாவூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் சார்பில், தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீ விபத்து மற்றும் இயற்கை இடர்பாடுகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் இருசம்மாள் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பாதுகாவலர்கள் பங்கேற்றனர். பயிற்சி நிறைவில் அனைவருக்கும் தீயணைப்புத் துறை சான்றிதழ் வழங்கப்பட்டது.