தருமபுரியைச் சேர்ந்த அருணா (21) தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். சக மாணவர் கவின் என்பவரின் காதல் டார்ச்சர் மற்றும் ஆபாசப் புகைப்படம் வெளியிடும் மிரட்டல் காரணமாக, விடுதியில் விஷம் அருந்தி பலியானார். இதுகுறித்து புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக இருந்ததே தன் மகளின் இறப்பிற்கு காரணம் என்று மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவன் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.