தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா

53பார்த்தது
தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமையிலும், பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலையிலும் நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளின் நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

மேலும், கோலப்போட்டிகள், கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மொழிப்புல முதன்மையர் ச. கவிதா வாழ்த்தினார். 

விழாவில் புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், கல்வியாளர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) இரா. சு. முருகன் வரவேற்றார். புல விருந்தகக் காப்பாளா் வ. வசந்தராஜா நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you