தஞ்சை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இரா. ரேவதி இன்று திங்கள்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு உயர் கல்வித் துறையின் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். ஏற்கனவே ஆட்சியராக இருந்த பிரியங்கா பங்கஜம் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். பிரியங்கா பங்கஜம் நகராட்சிகளின் இயக்குனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சியருக்கு ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.