தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வயது வரம்பைத் தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் ஆட்சியர் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்றது. ஆன்லைனில் பதிவு செய்திருந்த 35 குழந்தைகளில், தகுதியுடைய 22 குழந்தைகளுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் தனித் துணை ஆட்சியர் சௌமியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.