திருவையாறு அருகே செந்தலையில் சிபிஎம் கட்சி சார்பில் 15 வது மாநாடு பிரகாஷ் தலைமையில் நடந்தது. உமாநாத் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட குழு பக்கிரிசாமி, ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய குழு பழனிஅய்யா, கதிரவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பாக்கியராஜ் அஞ்சலி தீர்மானமும், கிளை செயலாளர் சங்கர் வேலை அறிக்கை படித்தனர். இதில் கிளை நிர்வாகிகள் செண்பகவள்ளி, வாசுதேவன், செந்தில், குமார், பிரஷ்னேவ், ரெங்கசாமி, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி கூலி ரூ. 319 வழங்க வேண்டும், அனைத்து பயனாளிகளுக்கும் புதிய தொகுப்பு கட்டிதர வேண்டும், 25-ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தொகுப்பு வீடுகளை பழுதுபார்க்க வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.