சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முதல்வர் விஜய்யின் சிறப்பான செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டே மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணைந்து வருவதாகக் கூறினார். தவெக எந்தவித குதிரை பேரமும் நடத்தவில்லை என்று மறுத்த அவர்,
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைப்பேன் எனச் சொன்னது யார், குதிரை பேரம் நடத்தியது யார் என்பது இந்த நாடறியும் என்றும் சாடினார்.