தாயுமானவர் திட்டம்.. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி மார்ச் மாதமும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில், விநியோகம் செய்யவுள்ள தேதியை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
