இந்தியாவில் கடவுள் நம்பிக்கை என்ற பெயரிலும், மதத்தின் பெயரிலும் பல அவலங்கள் நடந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், 2 குழந்தைகள் மேல் ஒருவர் கொதிக்கும் பாலை எடுத்து ஊற்றுகிறார். குழந்தைகள் அலறி துடித்தும் நிறுத்தாமல் கொதிக்கும் பாலை ஊற்றுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.