தேர்தல் நெருங்கும் பயத்தில் திமுக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமரித்துள்ளார். தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “திமுக ஆட்சி முடிவதற்கான Countdown தொடங்கியதும் Countless ஆக வெற்று அறிவிப்புகளை அறிவிக்கிறது. நான்கரை ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் ஒய்யாரமாகத் தூங்கிய திமுக அரசு, புத்தாண்டு தொடங்கியதும் தேர்தல் நெருங்கும் பயத்தில் மாணவர்களுக்கு லேப்டாப், பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.