முதலிரவு அன்று பல்பு வாங்க சென்ற மணமகன் மாயம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், முதலிரவு அன்று பல்பு வாங்க சென்ற மணமகன் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோஹ்சின் (26) என்ற இளைஞர், முதலிரவு அன்று பல்பு வாங்கி வருவதாக கூறிவிட்டு, கடைக்குச் சென்ற நிலையில், 3 நாட்களுக்கு பின் வீடு திரும்பியுள்ளார். நண்பர்கள் கொடுத்த ஒரு மாத்திரையை சாப்பிட்டதால் சற்று களைப்பாக உணர்ந்ததாகவும், வீடு திரும்ப நேரமானதால் பயந்துபோய் ஹரித்வாருக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
